தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தேசிய விருது பெற்ற கன்னட நடிகரும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டி, தற்போது 'காந்தாரா சேப்டர்-1' என்ற படத்தை இயக்கி நடித்திருக்கிறார். ருக்மணி வசந்த் நாயகியாக நடித்துள்ள இப்படம் அக்டோபர் இரண்டாம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் தெலுங்கு புரமோஷன் நிகழ்ச்சி நேற்று மாலை ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்போது ரிஷப் ஷெட்டி தனது தாய் மொழியாக கன்னடத்தில் உரையாற்றி இருக்கிறார். இது இணையத்தில் வெளியானதை அடுத்து அவரது கன்னட உரை குறித்து தெலுங்கு ரசிகர்கள் சமூக ஊடகங்களில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். 'நீங்கள் உங்கள் படத்தை தெலுங்கில் விளம்பரப்படுத்தும்போது தெலுங்கில் பேச முயற்சி செய்யுங்கள்' என்று கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். என்றாலும் இதுவரை இதற்கு அவர் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. அதேசமயம் இந்த நிகழ்ச்சியின்போது தனது நண்பரான ஜூனியர் என்டிஆர் குறித்து வெகுவாக பாராட்டி பேசி உள்ளார் ரிஷப் ஷெட்டி.