தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

இயக்குனர் சுந்தர்.சி தமிழில் பல வருடங்களாக வெற்றி படங்களை தந்து முன்னனி இயக்குனராக வலம் வருகிறார். தற்போது 'மூக்குத்தி அம்மன்' இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே சுந்தர். சி இயக்கத்தில் நடிகர் கார்த்தி புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பை இந்தாண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்க கார்த்தி கால்ஷீட் ஒதுக்கி இருந்தார். இதை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என தகவல் வெளியானது.
இந்த நிலையில் ஏற்கனவே கார்த்தி நடித்துள்ள ‛வா வாத்தியார், சர்தார் 2' ஆகிய படங்கள் இன்னும் டிஜிட்டல் வியாபாரம் நிறைவு பெறாமல் நிலுவையில் உள்ளதால் பிரின்ஸ் பிக்சர்ஸ் கார்த்தி, சுந்தர். சி படத்தை தயாரிப்பதில் இருந்து பின் வாங்கியுள்ளனர் என தமிழ் சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். இதனால் இந்த படத்தை இருவருமே கைவிட்டு அடுத்த கட்டத்தை நோக்கி அவர்களின் பயணத்தை தொடர்கின்றனர் என தகவல் வெளியாகி உள்ளது.