வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

தங்கமணி என்பவர் இயக்க புதுமுகங்கள் நடிக்கும் பேராண்டி படத்தில் பாட்டியாக நடித்துள்ளார் மூத்த நடிகை லதா. சென்னையில் நடந்த விழாவில் அவர் பேசுகையில் ''உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் அறிமுகம் ஆனேன். கடந்த 52 ஆண்டுகள், தமிழ், தெலுங்கு உட்பட 250க்கும் அதிகமான படங்களில் நடித்துவிட்டேன். இப்போது நல்ல கதைகள் கிடைத்தால் நடிக்கிறேன். பேராண்டி படத்தில் பாட்டியாக நடித்து இருக்கிறேன்.
இந்த படத்தில் மறைந்த நடிகை மனோரமா ஒரு பாடல் பாடியிருக்கிறார். அது அவர் பாடிய கடைசி பாடல். அவர் சொன்னதால் தான் இந்த கேரக்டரில் நடித்தேன். குளிரில் சரியான உடை கிடைக்காமல், பாடல் காட்சியில் தவித்ததாக ஹீரோ சொன்னார். எனக்கும் அப்படிப்பட்ட கஷ்டங்கள் வந்து இருக்கின்றன. என்.டி.ராமாராவ் படத்தில் நடித்தபோது காஷ்மீரில் படப்பிடிப்பு நடந்தது. எனக்கு உடை செட்டாகவில்லை. அந்த கடும் குளிரில் கஷ்டப்பட்டு நடித்தேன். அந்த காலத்தில் படங்கள் தியேட்டரில் ஓடின. 200 நாட்கள் வரை ஓடின. இப்போது செல்போனில் ஓடுகின்றன. அதில்தான் அதிகம் பார்க்கிறார்கள்'' என்றார்.