தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

நடிகர் ரவி மோகன் சமீபத்தில் சொந்த படத் தாயரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார். ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற அந்த நிறுவனத்தின் பெயரில் 'ப்ரோ கோட்' என்ற படம், யோகி பாபு நடிக்கும் புதிய படம் உள்ளிட்ட படங்கள் தயாரிப்பில் உள்ளன.
இதில் ரவிமோகன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பிற்கு டில்லியைச் சேர்ந்த மதுபான நிறுவனம் ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்தப் பெயரில் 'டிரேட் மார்க்' வாங்கியிருப்பதாக மனு செய்திருந்தார்கள்.
நீதிமதி லட்சுமி நாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு இந்த வழக்கு வந்தது. மதுபான நிறுவனம் 'ப்ரோ கோட்' படத் தயாரிப்பு, விளம்பரம், மார்க்கெட்டிங், வினியோகம், வெளியீடு ஆகியவற்றில் தலையிட 3 வார காலத் தடையை நீதிபதி விதித்துள்ளார்.
அதற்குள் மதுபான நிறுவனத்திற்கு ரவி மோகன் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி பதில் தர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதற்குள் அனுப்பப்படவில்லை என்றால் தடை நீட்டிக்கப்பட மாட்டாது என்றும் கூறியுள்ளார்.
ரவி மோகன் ஸ்டுடியோஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுபான நிறுவனத்தின் டிரேட்மார்க் விண்ணப்பம் இன்னும் பரிசீலனையில் இருப்பதாகவும், அதற்கு எதிர்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.