அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் |

காந்தாரா படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் அந்த படத்தின் இரண்டாம் பாகமாக காந்தாரா சாப்டர் 1 வெளியானது. முதல் பாகத்தைப் போலவே இந்த படத்திலும் ஒரு இயக்குனராகவும் நடிகராகவும் தன்னை மீண்டும் நிரூபித்துள்ளார் நடிகர் ரிஷப் ஷெட்டி. தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றி படமாக மாறி உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் கேரளாவுக்கு சென்ற ரிஷப் ஷெட்டி அங்கே தனது நண்பரான நடிகர் ஜெயசூர்யாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
காந்தாரா படத்தின் வெற்றிக்காக ஜெயசூர்யா ஸ்பெஷலாக தயார் செய்து வைத்திருந்த கேக் ஒன்றை வெட்டி அவருடன் சேர்ந்து காந்தாரா 2 வின் வெற்றியை கொண்டாடி மகிழுந்துள்ளார் ரிஷப் ஷெட்டி இது குறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் நடிகர் ஜெயசூர்யா பகிர்ந்து கொண்டுள்ளார்.
இவர்கள் இருவரும் எப்படி நட்பு வளையத்திற்குள் வந்தார்கள் என்பது ஆச்சரியமான விஷயம்தான். ஆனால் கடந்த வருடம் ஜெயசூர்யா கொல்லூர் மூகாம்பிகை கோவில் வழிபாட்டிற்கு சென்ற போது அவருக்கு கூடவே இருந்து தரிசனம் வரை உதவி செய்து வழியனுப்பி வைத்தவர் ரிஷப் ஷெட்டி தான். அதேபோல கடந்த வருடம் நடிகர் ஜெயசூர்யா ரஜினிகாந்தை சந்தித்தார்.. அந்த சந்திப்பும் ரிஷப் ஷெட்டி மூலமாகத்தான் நிகழ்ந்தது என்று கூறி அவருக்கு ஜெயசூர்யா நன்றி தெரிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.