தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தங்கமணி இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் படம் ‛பேராண்டி'. இந்த படத்தில் மறைந்த நடிகை மனோரமா ஒரு பாடல் பாடியிருக்கிறார். அவர் மறைந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. என்ன நடந்தது என்று இயக்குனரிடம் கேட்டோம்.
அவர் கூறியது, "பேரன் பாட்டி உறவை சொல்லும் படம் பேராண்டி. பாட்டியாக நடிக்க ஆச்சி மனோரமாவை முன்பே அணுகினோம். ஆனால் உடல்நிலை காரணமாக அவர் நடிக்கவில்லை அவருக்கு பதில் நடிகை லதா நடித்தார் ஆனாலும் எங்களுக்காக பச்சை மலை காட்டுக்குள்ள பவளமலை ஓரத்திலே என்ற பாடலை மனோரமா பாடி கொடுத்தார். ஹித்தேஷ் முருகவேல் இசை அமைத்தார்.
சென்னை ஸ்டூடியோ ஒன்றில் மனோரமா வந்து சின்சியராக பாடியது மறக்க முடியாத நிகழ்வு. அவரால் நடிக்க முடியாவிட்டாலும் அவர்தான் நடிகை லதாவை சிபாரிசு செய்தார். சினிமாவுக்காக மனோரமா பாடிய கடைசி பாடல் இதுதான். சூழ்நிலை காரணமாக இப்போதுதான் படத்தை வெளியிட உள்ளோம். கோபிசெட்டிபாளையம் பின்னணியில் இந்த கதை நடக்கிறது. ஆடு மேய்ப்பரளாக லதா வருகிறார். பேரனின் காதலுக்கு எப்படி உதவுகிறார் என கதை நகர்கிறது. நானே அந்த பாடலை எழுதியுள்ளேன். இத்தனை ஆண்டுகள் கழித்து மனோரமா பாடிய பாடலை கேட்பது புது அனுபவமாக இருக்கும்'' என்றார்.