தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

ஆரம்பகாலத்தில் திமுகவின் பிரசார பீரங்கிகளில் ஒருவராக இருந்தவர் காளிமுத்து. எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோது திமுக.,வில் இருந்து பிரிந்து அவருடன் சென்றார். எம்.ஜி.ஆர். அமைச்சரவையிலும் இடம் பெற்றார்.
ஆனால் அவர் திரைப்படத்திற்கு பாடல் எழுதியது அதிகம் கவனிக்கப்படாத ஒன்று. காளிமுத்துவின் நெருங்கிய நண்பராக இருந்த இயக்குனர் மகேந்திரன் தான் இயக்கிய 'கண்ணுக்கு மை எழுது' என்ற படத்தில் அவரை பாடலாசிரியராக அறிமுகப்படுத்தினார்.
இந்த படத்தில் அன்புமலர்களின், தாம்பாள சுந்தரியே, வாடா மல்லியே, சோகங்கள் என்ற பாடல்களை அவர் எழுதினார். இளையராஜாவின் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட்டாது.
பாட்டி, மகள், பேத்தியின் உறவை மையப்படுத்தி உருவான இந்த படத்தில் பானுமதி, சுஜாதா, வடிவுக்கரசி இவர்களுடன் சரத்பாபு நடித்திருந்தார். 1986ம் ஆண்டு வெளிவந்தது.