தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு ராஜமவுலி இயக்கி வரும் படத்தில் மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவில் ஆரம்பமாகி பின் கென்யாவிலும் நடக்கிறது.
இப்படத்தின் தலைப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார்கள். கடந்த சில நாட்களாக இப்படத்தின் தலைப்பு குறித்து டோலிவுட்டில் ஒரு தகவல் பரவி வருகிறது. படத்திற்கு 'வாரணாசி' என்ற பெயரைத் தேர்வு செய்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
இந்தியாவின் முக்கியமான ஆன்மிக நகரம் வாரணாசி. அந்நகரை காசி என்றும் அழைக்கிறார்கள். உலக அளவில் பிரபலமான காசி விஸ்வநாதர் கோயில் அங்கு அமைந்துள்ளது. விஸ்வநாதர் என்பதற்கு அகிலத்தை ஆள்பவன் என்றும் அர்த்தம்.
ராஜமவுலி - மகேஷ்பாபு படம் குறித்து இதற்கு முன்பு வெளியான ஒரு அப்டேட்டில் நந்தி, திரிசூலம், உடுக்கை ஆகியவற்றைக் கொண்ட ஒரு மணியை கழுத்தில் அணிந்த முகத்தைக் காட்டாத ஒருவரது புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்கள். அது நாயகன் மகேஷ்பாபுவின் புகைப்படமாகத்தான் இருக்கும் என்பது அனைவராலும் யூகிக்க முடிந்த ஒன்று.
படத்தில் ஆன்மிகத் தொடர்பு நிச்சயம் இருக்கும் என்பதை அது உறுதிப்படுத்தியது. 'வாரணாசி' என்ற பெயரும் படத்தை உலக அளவில் கொண்டு போய் சேர்க்கும் என்பதால் தேர்வு செய்துள்ளதாக ஒரு தகவல். இப்படி வெளியாகி உள்ள தகவல் உண்மைதானா என்பது ஒரு மாதத்தில் தெரிந்துவிடும்.