தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

இந்திய அளவில் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. கன்னடத்தில் நடிகர் சுதீப் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்.
பெங்களூரு தெற்கு பகுதியில் உள்ள பிடாடி என்ற இடத்தில் உள்ள ஜாலிவுட் ஸ்டுடியோஸ் அரங்கில் அதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரான ஐசரி கணேஷுக்கு சொந்தமான ஒரு ஸ்டுடியோ.
அந்த ஸ்டுடியோவில் சுற்றுச்சூழல் விதிகள், நடைமுறைகளுக்குட்பட்டு அமைக்கப்படவில்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதையடுத்து அங்கு நடைபெற்று வரும் பிக்பாஸ் அரங்கை உடனடியாக மூடும்படி கர்நாடக மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
விதிமீறலுக்கான விளக்கத்தையும் ஸ்டுடியோ நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்கள். சமீபத்தில்தான் அங்கு கன்னட பிக் பாஸ் சீசன் 12 ஆரம்பமானது. அரசின் உத்தரவை அடுத்து ராம்நகர் தாசில்தார் சீல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
போட்டியாளர்கள் மற்றும் அங்கு பணிபுரிந்து வந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். 2024 மார்ச் மாதம் நோட்டீஸ் அனுப்பிய பின்பும் அந்த ஸ்டுடியோவில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வந்ததாகவும், இந்திய பசுமைத் தீர்ப்பாயத்தின் விதிகளை மீறியதும் நடந்துள்ளது என வனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.