தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

வெங்கட் ஜனா இயக்கத்தில் ரஞ்சித், மெகாலி நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛இறுதிமுயற்சி'. அக்டோபர் 10ல் ரிலீசாகிறது. தொழிலதிபரான ரஞ்சித், வியாபார நெருக்கடி காரணமாக ஒருவரிடம் 80 லட்சம் கடன் வாங்குகிறார். அவரோ கந்து வட்டி பார்ட்டி. கடன், வட்டியை திருப்பி தராதவர்களை டார்ச்சர் செய்கிறார். அந்த வில்லன் பிடியில் ரஞ்சித்தும், அவர் குடும்பமும் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பது கதை. அப்போது இக்கட்டான சூழலில் ஒரு முகம் தெரியாத கேரக்டர் ரஞ்சித் குடும்பத்துக்கு உதவுகிறது. ரஞ்சித், அவர் மனைவி, 2 குழந்தைகளை காப்பாற்றுகிறது. அந்த கேரக்டருக்கு வாய்ஸ் கொடுத்து இருக்கிறார் விஜய்சேதுபதி.
இது குறித்து ரஞ்சித் கூறுகையில், ‛‛எனக்கும் விஜய்சேதுபதிக்கும் அதிகம் நட்பு இல்லை. ஆனாலும், கதை சொல்லி, வாய்ஸ் ஓவர் தரமுடியுமா என்று கேட்டோம். அவரோ மும்பையில் பிஸியாக இருந்தார். ஆனாலும், ஒரு நாள் அவரே சொந்த செலவில் பிளைட்டில் சென்னை வந்து, ஒரு சின்ன டப்பிங் தியேட்டரில் அந்த கேரக்டருக்கு வாய்ஸ் ஓவர் கொடுத்தார். ஒரு பைசா பணம் வாங்கவில்லை. அவரின் செயல் நெகிழ்ச்சியை தந்தது. கடனால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு உதவும், அவர்களுக்கு ஆறுதலாக பேசும் விஜய்சேதுபதியின் வாய்ஸ் படத்துக்கும் பெரிதும் உதவியது. படம் பார்ப்பவர்கள் அந்த வாய்ஸை பாராட்டுவார்கள்'' என்றார்.