தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

நடிகை நயன்தாராவின் ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக நேற்று போலீஸ் டி.ஜி.பி.அலுவலதத்திற்கு மின்னஞ்சல் வந்தது.
இதையடுத்து தேனாம்பேட்டை போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர்களுடன் நயன்தாரா இல்லத்துக்கு விரைந்தனர். வீடு முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனை முடிவில் இது வெறும் புரளி என்பது தெரிய வந்தது. மின்னஞ்சலில் மிரட்டல் கடிதம் அனுப்பிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
சமீபகாலமாக நடிகர், நடிகைகள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வருவது அதிகரித்துள்ளது. நடிகைகள் திரிஷா, சொர்ணமால்யா ஆகியோரின் வீடுகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சமீபத்தில் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சலில் மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. குறிப்பாக நடிகர் எஸ்.வி.சேகர் இல்லத்துக்கு இதுவரை 20 தடவை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.