தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் |

ஹிந்தி நடிகையான ஷில்பா ஷெட்டி அவரது கணவர் ஆகியோர் 2015 முதல் 2023 வரை தன்னை வியாபார ரீதியாக ஏமாற்றியதாக தீபக் கோத்தாரி என்பவர் புகார் அளித்திருந்தார். அந்த வழக்கை பொருளாதார குற்றப் பிரிவினர் விசாரித்து வருகிறார்கள். ஷில்பா மற்றும் அவரது கணவருக்கு எதிராக ஏற்கெனவே 'லுக் அவுட் நோட்டீஸ்' உள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக ஷில்பா ஷெட்டியிடம் சில தினங்களுக்கு முன்பு நான்கு மணி நேரங்களுக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. நீதிமன்றத்தில் வந்த வழக்கு விசாரணையின் போது ஷில்பா தம்பதியினர் 60 கோடி ரூபாயை செலுத்திய பிறகுதான் வெளிநாடு செல்ல அனுமதிக்க முடியும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்த தீபக், ஷில்பா தம்பதியிடம் வியாபார அபிவிருத்திக்காகக் கொடுத்த பணத்தை அவர்கள் தங்களது சொந்த செலவுக்காகப் பயன்படுத்தினார் என்று புகார் அளித்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த பொருளாதார குற்றப் பிரிவினர் அதை விசாரணையில் உறுதிப்படுத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, வெளிநாடுகளுக்கு செல்ல முடியாதபடி 'லுக் அவுட் நோட்டீஸ்' உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.