தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவுக்கு இந்த வருடம் குபேரா, கூலி என இரண்டு படங்கள் வெளியாகி வெற்றி படங்களாக அமைந்தன. ஆனால் இந்த இரண்டு படங்களிலும் அவர் வில்லனாக மற்றும் முக்கிய கதாபாத்திரமாக தான் நடித்திருந்தார். இந்த நிலையில் அவர் மீண்டும் ஹீரோவாக நடிக்கும் அவரது நூறாவது படம் தற்போது துவங்கி உள்ளது. இந்த படத்தை தமிழில் நித்தம் ஒரு வானம் என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் ரா கார்த்திக் இயக்குகிறார்.
இதில் பாலிவுட் நடிகை தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 90களில் தெலுங்கில் நாகார்ஜூனா, தபு ஜோடி ரசிகர்களிடம் ரொம்பவே வரவேற்பை பெற்ற ஜோடி. குறிப்பாக இவர்களது கெமிஸ்ட்ரி ரசிகர்களிடம் நன்றாக ஒர்க் அவுட் ஆகியது. அந்த வகையில் கிட்டத்தட்ட 27 வருடங்களுக்கு பிறகு நாகார்ஜூனாவின் இந்த நூறாவது படத்தில் இருவரும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள் என்கிற செய்தி தற்போது தெலுங்கு திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.