ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை |

இந்தியத் திரையுலகத்தின் தனிப் பெரும் இசையமைப்பாளர் இளையராஜா. இப்போதும் தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழிப் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இந்த 2025ம் ஆண்டில் இளையராஜா இசையமைத்து தமிழில் “தினசரி, ஸ்கூல், பேரன்பும் பெருங்கோபமும், படைத் தலைவன், திருக்குறள்” ஆகிய படங்களும், தெலுங்கில், 'சஷ்டி பூர்த்தி' படமும் வெளிவந்துள்ளன.
நேற்று இளையராஜா இசையமைத்து வரும் இரண்டு படங்களின் இசை வெளியீடு காலை, மாலை என இரண்டு வேளைகளில் நடந்தது. காலையில், அஜயன் பாலா இயக்கத்தில், ஸ்ரீராம் கார்த்திக், க்ரிஷா க்ரூப் மற்றும் பலர் நடிக்கும் 'மைலாஞ்சி' படத்தின் இசை வெளியீடும், மாலையில், அரவிந்தராஜ் இயக்கத்தில் ஜேஎம் பஷிர் நடிக்கும் 'தேசிய தலைவர்' படத்தின் இசை வெளியீடும் சென்னையில் நடைபெற்றது.
இரண்டு நிகழ்வுகளிலும் இளையராஜா கலந்து கொள்ளவில்லை என்றாலும், 'தேசிய திலைவர்' படத்தின் இசை வெளியீட்டை அதற்கு முன்னதாக தனிப்பட்ட முறையில் நடத்தி இருக்கிறார்கள். இளையராஜா இசையை வெளியிட தயாரிப்பாளர் தாணு, நடிகர் பிரபு அதைப் பெற்றுக் கொண்டுள்ளார்கள்.
இரண்டு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டவர்கள் இளையராஜாவின் இசையைப் பற்றிப் பாராட்டிப் பேசினார்கள்.