தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

கன்னட சினிமாவை தொடர்ந்து தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வருகிறார் ருக்மணி வசந்த். இந்த நிலையில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியான 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் மூலம் தற்போது இந்திய அளவில் கிரஷ் ஆகிவிட்டார் ருக்மணி வசந்த்.
இதையடுத்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ''இதுவரை தென்னிந்திய நடிகையாக இருந்த நான் இந்த காந்தாரா சாப்டர்-1 படத்தின் மூலம் இந்திய நடிகை ஆகிவிட்டேன். இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறேன். இது மிகுந்த உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. அதோடு தற்போது ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக பிரசாந்த் நீல் இயக்கும் 'டிராகன்' படம் மற்றும் யஷ் நடிக்கும் 'டாக்ஸிக்' போன்ற பான் இந்தியா படங்களிலும் நடித்து வருகிறேன். அதனால் இந்த படங்கள் திரைக்கு வரும்போது இன்னும் பெரிய அளவில் இந்திய ரசிகர்கள் மத்தியில் பேசப்படுவேன். இதன் காரணமாக அடுத்தடுத்து இந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ளும் வகையிலான பான் இந்தியா கதைகளை தேர்வு செய்யப் போகிறேன்'' என்று தெரிவித்திருக்கிறார் ருக்மணி வசந்த்.