'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

மலையாளத்தில் கடந்த 2017-ல் வெளியான ‛அங்கமாலி டைரீஸ்' என்கிற படத்தின் மூலம் கவனிக்கத்தக்க இயக்குனராக மாறியவர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. அதன்பிறகு ஜல்லிக்கட்டு, சுருளி என கிராமத்து பின்னணியில் எதார்த்த கதைகளை படமாக்கிய அவர், பின்னர் மம்முட்டியை வைத்து நண்பகல் நேரத்து மயக்கம் மற்றும் மோகன்லாலை வைத்து மலைக்கோட்டை வாலிபன் ஆகிய படங்களை இயக்கினார்.
இந்த நிலையில் அவர் முதன்முறையாக ஹிந்தியில் அடி எடுத்து வைக்கிறார். பிரபல பாலிவுட் இயக்குனரான ஹன்ஷல் மேத்தா இந்த படத்தை தயாரிக்கிறார். கூடவே லிஜோ ஜோஸ் பெல்லிசேரியும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார் என்கிற தகவலையும் சமீபத்தில் தனது சோசியல் மீடியா பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி.




