ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை |

தமிழில் ஜீவா, விக்ரம் இணைந்து நடித்த டேவிட், துல்கர் சல்மான் நடித்த சோலோ மற்றும் போர் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பாலிவுட் இயக்குனர் பிஜாய் நம்பியார். ஹிந்தியில் தற்போது தனது புதிய படத்தை இயக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதில் கதாநாயகியாக நடிகை பார்வதி நடிக்க இருக்கிறார் என்கிற செய்தி சமீபத்தில் இவர்களது சோசியல் மீடியா உரையாடலின் மூலமாக வெளிப்பட்டு உள்ளது.
பிஜாய் நம்பியார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த 13 வருடங்களுக்கு முன்பு மரியான் திரைப்படத்தில் பார்வதியை பார்த்து பிரமித்து போனேன். அதன்பிறகு பல முயற்சிகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் நாங்கள் இணைய இருக்கிறோம். நன்றி பார்வதி. மீண்டும் இணைந்து பணியாற்ற இன்னொரு 13 வருடம் நாம் காத்திருக்க வேண்டாம் என நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இவரது இந்த பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பார்வதி இது குறித்து கூறும்போது, “13 வருடம் 13 நாட்கள்... இனி உங்களை நான் காத்திருப்பில் விடமாட்டேன். பல அற்புதமான கதைகளில் நாம் இணைந்து பணியாற்றுவோம். இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த உங்களுக்கு நன்றி” என்று கூறியுள்ளவர் இந்த பதிவின் முத்தாய்ப்பாக, “எங்கேயும் போக மாட்டேன்” என்று பிஜாய் நம்பியாருக்கு நம்பிக்கை அளிக்கும் வார்த்தையையும் கூறியுள்ளார்.