தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

இப்போதெல்லாம் சிறைச் சாலைகளில் படப்பிடிப்பு நடத்துவது கடினமான ஒன்று. ஆனால் அந்த காலத்தில் சென்னை மத்திய சிறையில் ஏராளமான படங்களின் படப்பிடிப்பு நடந்துள்ளது. மேலும் சேலம், பாளையங்கோட்டை சிறைகளிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. டில்லி திஹார் சிறையிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது.
பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் படமான ஒரே தமிழ் படம் 'மனிதனின் மறுபக்கம்'. இது சிவகுமாரின் 150வது படம். சிவகுமார் ஒரு ஓவியர் அவர் தனது மனைவி ராதாவை கொன்றுதாக சிறை சென்று விடுவார். பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். ஆனால் கொலை செய்ததற்கான காரணத்தை மட்டும் சொல்ல மாட்டார்.
ராதாவின் தங்கையும், பத்திரிகையாளருமான ஜெயஸ்ரீ பெங்களூர் சிறையில் சிவகுமாரை சந்தித்து அவர் ஏன் கொலை செய்தார் என்ற கட்டுரையை வெளியிடுவார். சிவகுமார் கொலைக்கான காரணத்தை சொல்லாவிட்டாலும், சிவகுமார் ஒரு ஓவியர் அவர் தனது மனைவியை நிர்வாணமாக வரைய விரும்பினார், அதற்கு மனைவி ஒத்துக் கொள்ளததால் அவரை கொன்றார் என்று இவராகவே ஒரு காரணத்தை வெளியிடுவார்.
இதனால் உண்மை காரணத்தை சொல்வதற்காக சிறையில் இருந்து தப்பும் சிவகுமார் அடுத்து என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை. கே.ரங்கராஜ் இயக்கிய இந்தப் படத்தில் சிவகுமாருடன் ராதா, ஜெயஸ்ரீ, ஜெய் கணேஷ் உள்பட பலர் நடித்திருந்தார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரித்திருந்தார். இளையராஜா இசை அமைத்திருந்தார்.
இந்த படத்தின் தலைப்பு ரஜினி பட தலைப்பு. ரஜினியை வைத்து ஒரு மாஸ் ஆக்ஷன் படம் எடுக்கும் நோக்கத்தில் கே.பாலச்சந்தர் 'மனிதனின் மறுபக்கம்' தலைப்பை பதிவு செய்திருந்தார். ஆனால் அந்த படம் ஆரம்பிக்காததால் சத்யஜோதி பிலிம்சுக்கு கொடுத்தார்.