ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை |

தமிழில் மெஹந்தி சர்க்கஸ் என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் கோவையைச் சேர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ். குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோ மூலம் இன்னும் பிரபலமானார். அதன் பிறகு படங்களில் நடிப்பதை விட கேட்டரிங் தொழிலில் பிசியான மாதம்பட்டி ரங்கராஜ் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள பல பிரபலங்கள் வீட்டு நிகழ்வுகளுக்கும் கேட்டரிங் பொறுப்பேற்று நடத்தி வருகிறார். ஏற்கனவே அவருக்கு ஸ்ருதி என்கிற மனைவி இருந்த நிலையில் அவர் ஆடை அலங்கார நிபுணரான ஜாய் கிரிசில்டா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக சோசியல் மீடியாவில் தகவலும் புகைப்படங்களும் வெளியாகின.
இந்த புகைப்படங்களை வெளியிட்டு இதை அறிவித்த ஜாய் கிரிசில்டா சில மாதங்கள் கழித்து மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து மோசடி செய்து விட்டதாகவும் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறி மீடியாக்களில் பேசியதுடன் காவல் துறையிலும் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து மகளிர் ஆணையத்திலும் மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் அளித்தார். இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று மகளிர் ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பியது. அது மட்டுமல்ல ஜாய் கிரிசில்டாவும் இந்த விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதனையடுத்து சென்னையில் உள்ள மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவி ஸ்ருதி உடன் நேரில் ஆஜரானார். ஸ்ருதியை இவர் பிரிந்ததாக கூறப்படும் நிலையில் அவருடன் ரங்கராஜ் நேரில் ஆஜரானது பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. அதேப்போல் ஜாய் கிரிசில்டாவும் நேரில் ஆஜரானார்.
இந்த விஷயத்தில் மவுனம் காத்து வந்த மாதம்பட்டி ரங்கராஜ் இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன் என்று நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். பதிலுக்கு ஜாய் கிரிசில்டாவும் தங்களது திருமண புகைப்படத்தை பகிர்ந்து கொண்டு, “சட்டத்திற்கு முன் நீங்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. முதலில் நீங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு வாங்க.. சட்டம் தன் கடமையை செய்யும்” என்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜிடம் சுமார் இரண்டரை மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், வரும் 29ம் தேதி மீண்டுமு் ஆஜராகும்படி மாநில மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.