தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கம் அவ்வப்போது ஏதாவது சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. கடந்த மாதம் கூட காந்தாரா திரைப்படத்தை கேரளாவில் வெளியிடுவதில் பங்கு சதவீதம் பிரிப்பதில் அந்தப்படத்தை வெளியிட்ட நடிகர் பிரித்விராஜின் தயாரிப்பு நிறுவனத்துடன் கெடுபிடி காட்டி அதன்பிறகு ஒருவழியாக சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது. இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த ரசிகா மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் மனோஜ் என்பவர் கேரள திரைப்பட விநியோகஸ்தர் சங்கம் மீது நடவடிகை எடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “கேரள திரைப்பட விநியோகஸ்தர் சங்கம் முறையற்ற நடவடிக்கைகளை கடைபிடித்து வருகிறது. 2013 முதல் 2023 வரையிலான தங்களது பண வரவை முறைகேடான முறையில் பயன்படுத்தி இருக்கிறது. இது குறித்து மாவட்ட பதிவாளர் நடத்திய விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றும் கூறியுள்ளதுடன் இதன் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட கோரிக்கை வைத்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட இரு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இது குறித்து விளக்கம் அளிக்க கேரள திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளது.