தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தமிழில் ஏஸ், மதராஸி படங்களில் நடித்த ருக்மணி வசந்த், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். ரிஷப் ஷெட்டியுடன் அவர் நடித்து தற்போது திரைக்கு வந்துள்ள காந்தாரா சாப்டர்-1 படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் மூலம் பான் இந்தியா நடிகையாக இவர் உயர்ந்துள்ளார். இதையடுத்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் டிராகன், யஷ் நடிக்கும் டாக்சிக் போன்ற படங்களில் அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ருக்மணி வசந்த் அளித்துள்ள ஒரு பேட்டியில், தன்னை மிகவும் கவர்ந்த ஹீரோவாக தெலுங்கு நடிகர் நானியை குறிப்பிட்டுள்ளார். காரணம் அவரது நடிப்பு மிகவும் யதார்த்தமாக இருக்கும். அதனால் அவருடன் இணைந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார் ருக்மணி வசந்த்.