மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா |

மலையாள திரையுலகில் சில வருடங்களுக்கு முன்பு வரை முன்னணி நடிகையாக நடித்து வந்தவர் நடிகை காவ்யா மாதவன். தமிழில் ‛என் மன வானில், காசி' உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். நடிகர் திலீப் உடன் இணைந்து மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். அதனால் இருவர் பற்றி அதிகம் கிசுகிசுகளும் எழுந்தன. இதன் காரணமாகவே நடிகர் திலீப் அவரது மனைவி மஞ்சு வாரியர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதனைத் தொடர்ந்து நடிகை காவ்யா மாதவனையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் திலீப் மீண்டும் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு மகாலட்சுமி என்கிற பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே நடிகர் திலீப்புக்கு மஞ்சு வாரியாருக்கும் பிறந்த மீனாட்சி என்கிற மகளும் தற்போது இவர்கள் குடும்பத்துடன் தான் வசித்து வருகிறார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் மஞ்சு வாரியரின் தாயார் பிறந்தநாளும் மகள் மகாலட்சுமியின் பிறந்தநாளும் ஒரே நாளில் தான் வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவரின் பிறந்த நாளையும் ஒன்றாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார் நடிகை காவ்யா மாதவன். இது குறித்த புகைப்படம் ஒன்றையும் சோசியல் மீடியாவில் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.