போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண், பிரியங்கா மோகன் நடித்து வெளிவந்த 'ஓஜி' திரைப்படம் 300 கோடி வசூலித்து சாதனை புரிந்தது. அப்படம் வெளிவந்த பின் வெளியான சில படங்களுடன் ஒப்பிட்டுப் பேசினர்.
இதனிடையே, கன்னட இயக்குனரான சந்துரு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றால் இப்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அவர் இயக்கி, உபேந்திரா, சுதீப், சிவராஜ்குமார் மற்றும் பலர் நடிப்பில் 2023ல் 'கப்ஜா' என்ற கன்னடப் படம் வெளிவந்தது. அந்தப் படத்தின் சில காட்சிகளில் 'இன்ஸ்பயர்' ஆகி 'ஓஜி' படத்தை எடுத்துள்ளதாக சந்துரு கூறியிருந்தார்.
அது பவன் கல்யாண் ரசிகர்களிடம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரை சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்கள். 'கப்ஜா' படம் சரியாக ஓடவில்லை என்றாலும் ஒரு அதிரடியான ஆக்ஷன் படமாக இருந்தது. அதன் இரண்டாம் பாகத்தையும் எடுக்கப் போவதாக ஏற்கெனவே அதன் இயக்குனரும் அறிவித்திருந்தார்.