மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா |

சென்னையில் தற்போது கடும் மழை பெய்து வருவதால் பாதிப்புகள் குறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க போலீசும், பொதுமக்களும் இணைந்த வாட்ஸ்அப் குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவில் இணைய விரும்பிய நடிகை அம்பிகா அதற்கான லிங்கிற்கு சென்று வாட்ஸ்அப் குழுவில் சேர முயன்றபோது அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலத்திற்கு சென்று துணை கமிஷனர் விஜயகுமாரிடம் இதுகுறித்து முறையிட்டார். கமிஷனர் இது குறித்து விசாரித்தபோது வாட்ஸ்அப் குழுவில் ஆயிரம் பேருக்கு மேல் சேர்க்க இயலாது. அம்பிகாவின் கோரிக்கை தாமதமாக கிடைத்ததால் சேர்க்க முடியவில்லை என்பது தெரிய வந்தது.
அதைதொடர்ந்து சென்னை பெருநகர காவல்துறையின் தன்னார்வலர்கள் குழுவில் நடிகை அம்பிகாவை இணைப்பதாக துணை கமிஷனர் உறுதி அளித்தை தொடர்ந்து மகிழ்ச்சியுடன் திரும்பினார் அம்பிகா.