தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

ரஜினி , கமல் ஆகிய இருவரும் விரைவில் ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாகவும், அந்த படத்தை 'கூலி' படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் அதையடுத்து ரஜினி மீடியாக்களை சந்தித்தபோது, கமலுடன் மீண்டும் இணைந்து நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாகவும் அதற்கான கதை, இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை என்றும் ஒரு செய்தி வெளியிட்டிருந்தார். அதன்மூலம் அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவில்லை என்பது தெரியவந்தது.
இந்தநிலையில் ஒரு விருது விழா நிகழ்ச்சியில் ரஜினியின் இளைய மகளான இயக்குனர் சவுந்தர்யா ரஜினி அப்படம் குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், ''தமிழ் சினிமாவின் இரண்டு பெரிய ஜாம்பவான்களான ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் விரைவில் ஒரு படத்தில் இணைய உள்ளார்கள். ஆனால் அந்த மெகா படத்தை யார் இயக்குவார்கள் என்பது தெரியவில்லை. அந்த விபரங்கள் அனைத்தும் தற்போது செயல்பாட்டில் உள்ளன. சரியான நேரத்தில் அந்த படம் குறித்து அறிவிப்பார்கள்'' என்று கூறினார்.
அதை அடுத்து அதே மேடையில் இருந்த கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், ''மீண்டும் அவர்கள் இருவரையும் நாங்கள் ஒன்றாக பார்க்க வேண்டும் என்று கனவு கண்டோம். எல்லோரையும் போலவே அந்த ஒரு படத்திற்காக நாங்களும் காத்திருக்கிறோம்'' என்று கூறிய ஸ்ருதிஹாசன், ''ரஜினி சாரின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது படையப்பா. அவருடன் கூலி படத்தில் இணைந்து நடித்ததால் நான் மகிழ்ச்சி அடைந்தேன்'' என்றும் தெரிவித்திருக்கிறார்.