மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா |

தமிழ் சினிமாவில் கதாநாயகனின் அப்பா, கதாநாயகியன் அப்பா என்றாலே சில காட்சிகளில் மட்டுமே வந்து போவார்கள். அபூர்வமாக ஒரு சில படங்களில் மட்டுமே அவர்களுக்கு முக்கியத்துவமான காட்சிகள் இருக்கும். ஆனால், தான் இயக்கும் படங்களில் அப்பா கதாபாத்திரத்தை நாயகனுக்கு சமமான ஒரு கதாபாத்திரமாக உருவாக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.
அவரது இயக்கத்தில் வந்த 'பரியேறும் பெருமாள்' படத்தில் நாயகன் கதிர் அப்பா கதாபாத்திரத்தில் கூத்துக் கலைஞர் வண்ணாரப்பேட்டை தங்கராஜ், 'கர்ணன்' படத்தில் நாயகன் தனுஷ் அப்பா கதாபாத்திரத்தில் பூ ராமு, 'மாமன்னன்' படத்தில் நாயகன் உதயநிதியின் அப்பா கதாபாத்திரத்தில் வடிவேலு, 'பைசன்' படத்தில் நாயகன் துருவ் விக்ரமின் கதாபாத்திரத்தில் பசுபதி ஆகியோர் நடித்திருந்தார்கள்.
ஒரு படத்தில் நாயகன் பற்றியோ, நாயகி பற்றியோ பேசப்படுவதை விடவும், அந்தப் படத்தில் மற்ற குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களைப் பற்றிய பேச்சு வரும் போது அந்தப் படங்களின் கதாபாத்திர வடிவமைப்பும் பேசப்படுகிறது. அப்படியான ஒரு தாக்கத்தை மாரி செல்வராஜின் அப்பா கதாபாத்திரங்கள் ஏற்படுத்தி இருக்கின்றன.