தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

'மெஹந்தி சர்க்கஸ்' என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் கோவையைச் சேர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ். சமையல் சார்ந்த ரியாலிட்டி ஷோ மூலம் இன்னும் பிரபலமானார். அதன் பிறகு படங்களில் நடிப்பதை விட கேட்டரிங் தொழிலில் பிசியான மாதம்பட்டி ரங்கராஜ், பல பிரபலங்கள் வீட்டு நிகழ்வுகளுக்கும் கேட்டரிங் பொறுப்பேற்று நடத்தி வருகிறார். ஏற்கனவே அவருக்கு ஸ்ருதி என்கிற மனைவி இருந்த நிலையில் அவர் ஆடை அலங்கார நிபுணரான ஜாய் கிரிசில்டா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக சோசியல் மீடியாவில் தகவலும் புகைப்படங்களும் வெளியாகின.
இந்த புகைப்படங்களை வெளியிட்டு இதை அறிவித்த ஜாய் கிரிசில்டா சில மாதங்கள் கழித்து மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து மோசடி செய்து விட்டதாகவும் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறி போலீஸ் நிலையத்திலும் மகளிர் ஆணையத்திலும் மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் அளித்தார். இது தொடர்பான விசாரணை மகளிர் ஆணையத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் ஜாய் கிரிசில்டா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தான் நிறை மாத கர்பிணியாக இருப்பதால் ஆடை வடிவமைப்பில் ஈடுபட முடியவில்லை என்பதாலும், தனக்கும் தன் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் மருத்துவ செலவு, வீட்டு வாடகை, மற்றும் இதர செலவுகளுக்காக மாதம் 6,50,000 ரூபாய் பராமரிப்பு செலவு தொகையை ரங்கராஜ் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.