மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா |

‛ஒரு நாள் கூத்து' படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். மதுரையில் பிறந்து துபாயில் வளர்ந்தவர். தமிழ், தெலுங்கில் மளமளவென படங்களில் நடித்து வந்தார். தற்போது சினிமாவை விட்டே ஒதுங்கி துபாயில் செட்டிலாகிவிட்டார். அதேசமயம் கார் ரேஸில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் துபாய் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்வதாக அறிவித்தார். அவ்வப்போது வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வரும் இவர், இப்போது ஏஐ தொழில்நுட்பத்தின் ஆபத்தை பற்றி பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், ‛‛அபத்தமான ஏஐ வீடியோக்களை உண்மையானவையாக காட்டும் இந்தப்போக்கு மிகவும் மோசமானது. இப்போது அவை முற்றிலும் பிரித்தறிய முடியாததாக மாறும்போது அது எவ்வளவு மோசமாகிவிடும் என்று கற்பனை செய்து பாருங்கள்'' என குறிப்பிட்டுள்ளார்.