2025 வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... | மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? |

மெஹந்தி சர்க்கஸ் படத்தில் நாயகனாக நடித்தவர் மாதம்பட்டி ரங்கராஜ். பிரபல சமையல் கலைஞரான இவருக்கு ஸ்ருதி என்ற மனைவியும், இரு பிள்ளைகளும் உள்ளனர். ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா என்பவர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை காதலித்து ஏமாற்றி திருமண மோசடி செய்துவிட்டதாகவும், அவரால் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் போலீஸில் புகார் அளித்தார். இந்த புகாரில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் மாநில மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்து இருந்தார் ஜாய் கிரிசில்டா. ஆனால் இவரின் குற்றச்சாட்டை மறுத்து வந்த ரங்கராஜ், இதை சட்டப்படி எதிர்கொள்வேன் என கூறியிருந்தார்.
சமீபத்தில் மாநில மகளிர் ஆணையம் முன்பு நடந்த விசாரணையில் ரங்கராஜ் தன் மனைவி உடன் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தார். அதேப்போல் ஜாய் கிரிசில்டாவும் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்தச்சூழலில் கடந்தவாரம் ஜாய் கிரிசில்டாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை ரங்கராஜ் போன்றே இருப்பதாகவும், ஜூனியர் மாதம்பட்டி ரங்கராஜ் பிறந்து இருப்பதாகவும் ஜாய் கிரிசில்டா வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்க போலீஸிற்கு மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. இதற்கிடையே ஜாய் கிரிசில்டா வெளியிட்ட பதிவில், ‛‛மகளிர் ஆணையம் முன்பு நடந்த விசாரணையில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை காதலித்து திருமணம் செய்ததையும், இந்த குழந்தை தன்னுடையது தான் என ஒப்புக் கொண்டதாகவும்'' குறிப்பிட்டுள்ளார்.
இவரின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.