தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தமிழகத்தை சேர்ந்த பத்மநாபன் தயாளன் கன்னட சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு கர்நாடக அரசு விருது வழங்கியது. இந்த நிலையில் அவர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு என்ற புதிய படத்தை தொடங்கி உள்ளார்.
1950களில் பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தியாகராஜ பாகவதர் மற்றும் என்.எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்டோர் சிறை தண்டனை பெற்று பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா, லிஸ்ஸி ஆன்டனி, சரவணன், லொள்ளு சபா மாறன், இளவரசு மற்றும் கவிதா பாரதி ஆகியோர் நடிக்கிறார்கள். கே.வி.சபரீஷ் மற்றும் தயாள் பத்மநாபன் இணைந்து தயாரிக்கிறார்கள். தர்புகா சிவா இசை அமைக்கிறார். எம்.வி.பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கி உள்ளது. படம் பற்றி இயக்குனர் தயாள் பத்மநாபன் கூறியதாவது : இந்தப் படம், "லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு” என்ற உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது. ஒரு பத்திரிகையாளர் மர்மக் கொலை வழக்கின் பின்னணியில் நடந்த அரசியல், சினிமா மற்றும் ஊடக கலவையை நவீன கண்ணோட்டத்தில் பிரதிபலிக்கும் விதமாக இப்படம் அமைந்துள்ளது. இது ஒரு சாதாரண குற்றக் கதை அல்ல. இது தமிழ் சினிமா வரலாற்றில் நடந்த உண்மை சம்பவத்தை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பதிவு செய்கிறது. இந்தப்படம் ஒரு வலிமையான கலை மற்றும் உண்மைச் செய்தி கலந்த படைப்பாக உருவாகிறது என்றார்.