தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சினிமாவின் வருகைக்கு முன் நடத்தப்பட்ட பல நாடகங்கள் பின்னர் திரைப்படங்களானது. தமிழ் நாடகங்கள் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னட நாடகங்களும், மராட்டிய நாடகங்களும் சினிமா ஆனது. ஒன்றிரண்டு மலையாள நாடகங்களும் சினிமா ஆனது. அதில் முக்கியமானது 'வைரமாலை'.
தோட்டக்கர விஸ்வநாதன் என்ற மலையாள நாடக ஆசிரியர் எழுதிய நாடகம் அங்கு வெற்றிகரமாக நடத்தப்பட்டு வந்தது. காணாமல் போன ஒரு வைரமாலையை சுற்றி நடக்கிற காமெடி கதை. நாடகத்தை பார்த்தவர்கள் சிரித்து சிரித்து வயிறு வலித்ததாக அப்போது கூறுவார்கள்.
இதனால் இந்த நாடகத்தை தமிழ் சினிமாவாக்க விரும்பினார் அப்போதைய மலையாள தயாரிப்பாளர் ஏ.சி.பிள்ளை. தமிழ் தயாரிப்பாளர் ஸ்ரீபாத சங்கருடன் இணைந்து இதனை தயாரித்தார். பத்மினி, ராகினி, ஆர்.எஸ்.மனோகர், தங்கேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசை அமைத்தனர்.
முழுநீள நகைச்சுவை சித்திரம் என்று விளம்பரம் செய்யப்பட்டு படம் வெளியானாலும், நாடகம் சிரிக்க வைத்த அளவிற்கு சினிமா சிரிக்க வைக்க தவறியதால் படம் தோல்வி அடைந்தது.