தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக கமல், சிம்பு, திரிஷா உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் 'தக் லைப்'. எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் தோல்வியை தழுவியது. இதனால் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப மணிரத்னம் களமிறங்கி உள்ளார். இளைஞர்களை கவரும் வகையில் ஒரு காதல் படத்தை அடுத்து இயக்க போகிறார். இதில் துருவ் விக்ரம் நடிக்கலாம் என கூறப்படுகிறது.
இதற்கிடையே சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார் மணிரத்னம். ஆனால் சில காரணங்களால் சிம்பு நடிக்கவில்லை. இதனால் அந்த கதையை இப்போது விஜய் சேதுபதியிடம் சொல்லி ஓகே பெற்றுவிட்டாராம். ஏற்கனவே மணிரத்னத்தின் ‛செக்க சிவந்த வானம்' படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக தற்போது டிரெண்ட்டிங்கில் உள்ள ருக்மிணி வசந்த்தை நடிக்க வைக்க பேசி வருகின்றனர். இவர் தமிழில் அறிமுகமானது விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' படம் என்பது குறிப்பிடத்தக்கது.