தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தமிழ் சினிமாவில் புகழ் அடைந்தாலும் ஐஸ்வர்யா ராஜேஷ் அறிமுகமானது 'ராம்பந்து' என்ற தெலுங்கு படத்தில்தான். தமிழில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தாலும் 'அட்டகத்தி' படம்தான் அவரை அடையாளம் காட்டியது. அதன் பிறகு தமிழில் முன்னணி நடிகை ஆனார்.
தெலுங்கில் 'கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி, மிஸ்மேட்ச், வேர்ல்ட் பேமஸ் லவ்வர், தக் ஜெகதீஸ், ரிபப்ளிக்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக 'சங்கராந்தகி வஸ்துனம்' படத்தில் நடித்தார்.
இந்த நிலையில் ஐஸ்வர்யாவின் அடுத்த தெலுங்கு படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இன்னும் டைட்டில் வைக்காத இந்த படத்தை கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் மஹேஸ்வர் ரெட்டி தயாரிக்கிறார். குஷேந்தர் ஒளிப்பதிவை கவனிக்கிறார். பரத் மஞ்சிராஜு இசையமைக்கிறார்.
வீர் நாயகனாக நடிக்கிறார், பரத் தர்ஷன் இயக்குகிறார். இந்த படத்தின் துவக்க விழா ஹைதராபாத்தில் நடந்தது. படப்பிடிப்பு வரும் 19ம் தேதி தொடங்குகிறது. தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடப்படுகிறது.