மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா |

நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத் தலைப்பு சிக்மா என நேற்று அறிவிக்கப்பட்டது. படத்தின் புதிய போஸ்டரும் வெளியானது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடவில்லை. சோஷியல் மீடியாவில் பெரிய அளவு ஆதரவு தெரிவிக்கவில்லை. இது குறித்து விஜய் தரப்பில் விசாரித்தால், "எங்களுக்கு எந்த அறிவிப்பு வரவில்லை. அப்பா, மகன் உறவு குறித்து சரிவர புரியவில்லை. மகன் படம் குறித்து இதுவரை விஜய் பேசவில்லை. வாழ்த்தி ஒரு அறிக்கை, வீடியோ வெளியிடவில்லை. அதை மகனும் விரும்பவில்லை. ஆகவே சிக்மா விஷயத்தில் நாங்களும் அமைதியாக இருக்கிறோம். வருங்காலத்தில் அவர் வாழ்த்தி, எங்களையும் வாழ்த்த சொன்னால் அதை செய்வோம்.
அப்பா ஆதரவு இல்லாமல் சஞ்சய் தனியாக ஜெயிக்க விரும்புகிறார் போலும். இப்போது உள்ள இளைஞர்கள் தனித்துவமாக இருக்க விரும்புகிறார்கள். விஜய் மட்டுமல்ல, அவரை அறிமுகப்படுத்தி ஆளாக்கிய எஸ்.ஏ.சந்திரசேகரன் கூட பேரன் படம் குறித்து எதையும் பேசவில்லை, இதுவரை வாழ்த்தவில்லையே என்கிறார்கள். சிக்மா பட விழாவுக்காவது அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி வருகிறார்களா என தெரியவில்லை. கோலிவுட்டில் எந்த வாரிசுக்கும் இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டதில்லை. ஏனிந்த புறகணிப்பு என புரியவில்லை என்ற குரலும் கேட்கிறது.