மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா |

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள படம் ‛காந்தா'. பாக்யஸ்ரீ போர்ஸ், சமுத்திரகனி, ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வருகிற 14ம் தேதி படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரிலீஸாகிறது. இப்படம் மறைந்த நடிகர் தியாகராஜ பாகவதர் மற்றும் பத்திரிக்கையாளர் லட்சுமி காந்தன் கொலை வழக்கு பின்னணியில் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு தியாகராஜ பாகவதர் குடும்பத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இதுதொடர்பாக தியாகராஜ பாகவதரின் பேரன் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் இந்த படத்தில் தியாகராஜ பாகவதர் பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தியாகராஜ பாகவதரின் சட்டப்பூர்வ வாரிசுகளிடமிருந்து அனுமதி வாங்கிய பின்பே படத்தை திரையிட வேண்டும் என்றும், அதுவரை இப்படத்திற்குத் தடை விதிக்க வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பதிலளிக்க கோரி படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகரான துல்கர் சல்மானுக்கு உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தார்.