ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை |

சென்னையில் நடந்த 'மிடில்கிளாஸ்' படவிழாவில் ஒரு காலத்தில் 150 ரூபாய் இல்லாமல் கஷ்டப்பட்டதை உருக்கமாக பேசியுள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.
அவர் பேசியது: ''சினிமா ஆசையில்தான் சென்னை வந்தேன். என் முதல் படம் ரிலீஸ் ஆன நாளில் என் திருமணம் நடந்தது. ஆனால், அதற்கு முன்பு நிறைய கஷ்டப்பட்டு இருக்கிறேன். ஒரு தடவை வேலைக்காக சென்னையில் இருந்து பெங்களூரு சென்றேன். அதுவும் 5 ஆயிரம் சம்பளத்துக்காக, பின்னர், கம்பெனி சார்பில் சென்னைக்கு பிளைட்டில் வந்தபோது என்னிடம் பணம் அதிகம் இல்லை.
அப்போது எனக்கு ஏர்போர்ட்டில் ஒரு போட்டியில் குலுக்கல் முறையில் டிவி விழுந்தது. அதை வாங்க சில நடைமுறைகள் சொல்லி 300 கேட்டார்கள். ஆனால், என்னிடம் அப்போது கை வசம் 150 ரூபாய்தான் இருந்தது. மீதியை புரட்ட முடியாமல் தவித்தேன். அந்த டிவியை என்னால் வாங்க முடியவில்லை. அவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து ஓரளவு நல்ல நிலைக்கு வந்து இருக்கிறேன்.
இன்னும் சில ஆண்டுகள் அடிப்படை வாழ்க்கைக்கு எந்த கஷ்டமும் இல்லை என்ற நிலையில் இருக்கிறேன். மிடில்கிளாஸ் படத்துக்கு என்னிடம் பணியாற்றிய பிரணவ் இசையமைத்து இருப்பது மகிழ்ச்சி. என்னிடம் பணியாற்றி பலர் இசையமைப்பாளர் ஆனது கூடுதல் மகிழ்ச்சி'' என்றார்.