தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், நடிகர் சந்தீப் கிஷனை வைத்து 'சிக்மா' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் டைட்டில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆச்சரியமாக இந்தப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இப்போது டைட்டில் அறிவிக்கப்பட்டது வரை நடிகர் விஜய் தனது மகனுக்கு இதுகுறித்து ஒரு வாழ்த்து செய்தியோ பாராட்டுக்களையோ தெரிவித்ததாக சோசியல் மீடியாவில் எந்த பதிவும் வெளியாகவில்லை. இன்னும் சொல்லப்போனால் தந்தையும் மகனும் இணைந்து எடுத்த ஒரு புகைப்படம் கூட கடந்த ஐந்து வருடங்களில் வெளியானது இல்லை.
விஜய் மட்டுமல்ல அவரது தாத்தா எஸ்.ஏ சந்திரசேகரன் கூட பொதுவாக தனது பேரன் பற்றி பொதுவெளியில் எங்கேயும் பேசுவதில்லை. இதற்கு ஜேசன் சஞ்சய் அவரது தந்தை மற்றும் தாத்தாவின் தலையீடு இல்லாமல் தனித்துவமாக தெரிய விரும்புகிறார் என்பது காரணமாக சொல்லப்படுகிறது. அதே சமயம் நடிகர் விஜய் தரப்பில் வேறு விஷயம் ஒன்றை சொல்கிறார்கள்.
அதாவது விஜய் தனது முதல் படத்தில் அறிமுகமானதிலிருந்து அவரை ஒரு மிகப்பெரிய ஹீரோவாக நிலைநிறுத்தும் வரை அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகரன் தான் பக்க பலமாக இருந்தார். அதே சமயம் விஜய்யின் எல்லா முடிவுகளையும் அவரே எடுத்தார். ஒரு குறிப்பிட்ட காலம் வரை விஜய்யால் சொந்தமாக எந்த முடிவுகளையும் எடுக்க முடியாத சூழல்தான் இருந்தது. விஜய் அரசியலில் நுழைவது, அரசியல் கட்சி துவங்குவது வரை எல்லாமே விஜய்யின் தந்தை முடிவில் தான் தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் விஜய்க்கு இதில் பெரிய உடன்பாடு இல்லாமல் இருந்தது.. வேறு வழியின்றி தான் தந்தையின் குறுக்கீடுகளை அவர் பொறுத்துக்கொண்டார். அதனால் தன் மகனும் அப்படி தன் அடையாளத்தின் பின்னால் வளர்வதை விஜய் விரும்பவில்லை. அவருக்கான அடையாளத்தை அவரே சுயமாக தேடிக் கொள்ளட்டும் என்று விஜய் கருதுவதாக சொல்கிறார்கள். அதேசமயம் மீடியா வெளிச்சத்துக்கு பின்னால் தந்தை - மகன் உறவு சுமூகமாகவே இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.