தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா, பாக்யஸ்ரீ நடித்த ‛காந்தா' படம் பழம்பெரும் நடிகர் தியாகராஜ பாகவதர் சம்பந்தப்பட்டது. அவரின் வெற்றி, தோல்வியை பேசுகிறது. அதை படக்குழு சஸ்பென்ஸ் ஆக வைத்துள்ளது என்று செய்திகள் வந்தன. ஆனால், அது தவறான செய்தி என்று கூறப்படுகிறது. நேற்று பல இடங்களில் படத்தின் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. அதை பார்த்தவர்கள் படத்தின் கதைக்கும் தியாகராஜ பாகதவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
கதைப்படி, சமுத்திரக்கனி இயக்குனர், துல்கர் ஹீரோ, புதுமுக ஹீரோயின் பாக்யஸ்ரீயால் ஒரு பிரச்னை வருகிறது. அது என்ன? இயக்குனர், ஹீரோ ஈகோ பிரச்னை எதில் போய் முடிகிறது என்பது கதை. 1950களில் கதை நடக்கிறது. இந்த படத்துக்கும் எந்த உண்மை கதைக்கும் சம்பந்தம் இல்லை. படம் பார்த்தவர்கள் துல்கர் நடிப்பை புகழ்கிறார்கள். நாளை படம் வெளியானபின் ரசிகர்கள் கருத்து, வரவேற்பு தெரிய வரும். துல்கர் இதற்கு முன்பு நடித்த ப்ரீயட் படமான சீதா ராமம், லக்கி பாஸ்கர் படங்கள் வெற்றி பெற்றன. அந்த வரிசையில் காந்தாவும் சேருமா என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும் என்கிறார்கள்.