தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

மம்முட்டி நடிப்பில் மலையாளத்தில் வரும் நவம்பர் 27ம் தேதி வெளியாக இருக்கும் படம் களம்காவல். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் விநாயகன் நடித்துள்ளார். இயக்குனர் ஜிதின் கே ஜோஸ் இயக்கியுள்ளார். படத்தை மம்முட்டியே தயாரித்துள்ளார். ஆச்சரியமாக மம்முட்டி வில்லன் கதாபாத்திரத்திலும் விநாயகன் ஒரு துப்பறியும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ஆனால் முதலில் மம்முட்டியின் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் பிரித்விராஜ் தான் என்று சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார் படத்தின் இயக்குனர் ஜிதின் கே ஜோஸ்.
இது குறித்து அவர் கூறும்போது, “இந்த படத்தின் கதையை எழுதும்போதே பிரித்விராஜை மனதில் வைத்து தான் எழுதினேன். ஆனால் அப்போது அவர் எம்புரான் படப்பிடிப்பில் பிசியாக இருந்தார். இந்த கதையை கேட்டுவிட்டு நிச்சயமாக இந்த கதாபாத்திரம் மம்முட்டிக்கு பொருத்தமாக இருக்கும். அவரிடம் சொல்லுங்கள் என்று சொன்னார். அவர் சொன்னது போலவே மம்முட்டிக்கு அந்த கதாபாத்திரமும் பிடித்துப்போய், அவர் நடிக்க ஒப்புக்கொண்டதுடன் படத்தை தயாரிக்கவும் முன் வந்தார். அதே சமயம் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விநாயகனை நடிக்க வைக்க சிபாரிசு செய்ததும் மம்முட்டி தான்” என்று கூறியுள்ளார்.