தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக டிராகன் என்ற படத்தில் நடித்தவர் கயாடு லோஹர். அதைய டுத்து தற்போது அதர்வாவுக்கு ஜோடியாக இதயம் முரளி என்ற படத்தில் நடித்து வருபவர், தெலுங்கு, மலையாளத்திலும் நடிக்கிறார். இந்த நிலையில், உருவக்கேலி குறித்து அவரிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில், சோசியல் மீடியாவில் திரைபிரபலங்களை கண்டபடி விமர்சிக்கிறார்கள். இன்றைய தருவாயில் அதுபோன்று விமர்சனங்களில் இருந்து யாரும் தப்ப இயலாது. என்றாலும், யாராக இருந்தாலும் மற்றவர்கள் மீது கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும். காரணம் எல்லோருக்கும் உடல்கட்டு ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதேசமயம், அனைவருக்கும் ஒரே மாதிரியான இருந்தால் ஒரு தனித்துவம் என்பதும் இல்லாமல் போய்விடும் என்றும் தனது கருத்தினை தெரிவித்திருக்கிறார்