தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக டிராகன் படத்தில் நடித்து பிரபலமானவர் கயாடு லோஹர். அதைத் தொடர்ந்து அதர்வாவுக்கு ஜோடியாக இதயம் முரளி மற்றும் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக இம்மோர்ட்டல் உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். இவர் அளித்த ஒரு பேட்டி குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில், நள்ளிரவு பார்ட்டிக்கு சென்ற தனக்கு, லட்சக்கணக்கில் பணம் கொடுத்ததாக தயாரிப்பாளர் ஒருவர் அமலாக்கத்துறையிடம் கூறியதாக பரவி வரும் தகவல் குறித்து ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அவர் கூறுகையில், சினிமாவில் நடிக்க வந்த பிறகு என்னைப் பற்றி சோசியல் மீடியாவில் பலதரப்பட்ட வதந்திகள் பரவிக் கொண்டிருக்கிறது. அதில், நள்ளிரவு பார்ட்டிக்கு சென்று லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாக வெளியான இந்த வதந்தி என்னை பெரிய அளவில் வேதனைக்கு உள்ளாக்கிவிட்டது. எந்த ஒரு தவறையும் செய்யாமல் சினிமாவில் ஒரு இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் என்னைப் பற்றி ஏன் இது போன்று தவறான செய்திகள் பரப்புகிறார்கள்? எதற்காக என்னை இப்படி டார்கெட் செய்கிறார்கள்? என் மீது அவர்களுக்கு ஏன் இத்தனை வன்மம் என்று தனது வேதனையை கேள்விகளாக கொட்டியுள்ளார் கயாடு லோஹர் .