தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தமிழ், தெலுங்கில் ஒரு ரவுண்ட் வலம் வந்த நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது பாலிவுட்டில் தான் அதிகம் நடிக்கிறார். தென்னிந்திய மொழிகளில் நடிப்பதை குறைத்துவிட்டார். சமீபகாலமாக நடிகைகளின் பெயரில் போலியான வாட்ஸ்அப் எண் உருவாக்கி மோசடி சம்பவங்கள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அதிதி ராவ், ஸ்ரேயா போன்ற நடிகைகள் இந்த குற்றச்சாட்டை முன் வைத்தனர். இப்போது ரகுலுக்கும் இதேபோன்று நடந்துள்ளது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ‛‛வணக்கம் நண்பர்களே... யாரோ ஒருவர் என்னைப் போல வாட்ஸ்அப்பில் ஆள்மாறாட்டம் செய்து மக்களுடன் அரட்டை அடிப்பது எனக்குத் தெரிய வந்துள்ளது. இது என்னுடைய எண் அல்ல என்பதை நினைவில் கொள்ளவும், எந்த விதமான உரையாடல்களிலும் ஈடுபட வேண்டாம். தயவுசெய்து அதை பிளாக் செய்யவும்'' என குறிப்பிட்டு அந்த போலி எண்ணையும் பகிர்ந்துள்ளார்.