தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

குடும்ப பிரச்னை, வறுமை காரணமாக தனது 7 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட நல்லதங்காள் கதை தமிழ்நாட்டில் பிரபலம். நாட்டுப்புற ஒப்பாரி பாடல்களில் நல்லதங்காள் கதை பாடப்பட்டது. வில்லுப்பாட்டாக இசைக்கப்பட்டது. பிற்காலத்தில் சிலரால் நாடகமாகவும் நடத்தப்பட்டது.
இந்த கதை 1935ம் ஆண்டு திரைப்படமாக உருவானது. பி. வி. ராவ் இயக்கத்தில் ஏஞ்சல் பிலிம்ஸ் நிறுவனத்தினரால் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தில் எம். எஸ். தாமோதர ராவ், சி.எஸ்.ஜெயராமன், கே.ஆர். காந்திமதி பாய், பி. எஸ். சிவபாக்கியம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
இதே கதை 1955ம் ஆண்டு மீண்டும் உருவானது. பி.வி.கிருஷ்ண அய்யர் இயக்கினார், ஆர்.எஸ்.மனோகர், ஜி.வரலட்சுமி, ஏ.பி.நாகராஜன், சந்திரபாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். மதராஸ் மூவிடோன் தயாரித்திருந்தது. இரண்டு படங்களுமே மக்களிடம் குறிப்பாக பெண்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது 'நல்லதங்காள்' கதை மறைந்து விட்டது.