'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

திரைப்படங்களில் பகுத்தறிவு பேசுவார், அரசியலில் திராவிட கொள்கை ஏற்பார். ஆனால் அடிப்படையில் விஜயகாந்த் பெரிய பக்திமான். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பக்தி திரைப்படங்களில் ஆர்வமுடன் நடித்திருக்கிறார். அவற்றில் முக்கியமானது 'வேலுண்டு வினையில்லை'.
ஒரு காலத்தில் பக்தி படங்களால் மக்களை வசியம் செய்த கே.சங்கர் சிறிய இடைவெளிக்கு பிறகு இயக்கிய படம் இது. இதில் விஜயகாந்துடன் அம்பிகா, நம்பியார், ஜெய் கணேஷ், செந்தில், டெல்லி கணேஷ், வடிவுக்கரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். நம்பியாரின் குடும்பம் ஒரு தீவிர முருக பக்த குடும்பம். அவர்கள் முருகன் வேலை வீட்டில் வைத்து பரம்பரை பரம்பரையாக வணங்கி வருவார்கள். தங்கத்தினாலான அந்த வேல் அன்றைய மதிப்புபடி ஒரு கோடி ரூபாய்.
அதனை வில்லன் ஜெய் கணேஷ் திருடி வெளிநாட்டினருக்கு விற்க முயற்சிப்பார். காணாமல் போன வேலை தேடி போலீஸ் அதிகாரியான விஜயகாந்த் வருவார். அவர் முருக பக்தர் வேடம் அணிந்து கோவிலில் தங்கியிருந்து திருட்டுப்போன வேலை தேடுவார். அந்த வேல் கிடைத்ததா? என்பதுதான் படத்தின் கதை. பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் ஓரளவிற்கு வரவேற்பை பெற்ற படம்.