தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

லெனின் வடமலை இயக்கத்தில் பிரபாகரன் நடிக்கும் யாரு போட்ட கோடு படத்தில், ஆருத்ரா, ஸ்கெட்ச், பாண்டமுனி படங்களில் ஹீரோயினாக நடித்த மெகாலி நடித்துள்ளார். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முதல்நாள்தான் இந்த படத்தில் அவர் கமிட்டாகி இருக்கிறார்.
இது குறித்து இயக்குனர் கூறுகையில் ''இந்த கதையை எழுதிவிட்டு ஹீரோயின் தேடினோம். புதுமுக ஹீரோ, புது கம்பெனி என்பதால் பலர் தயங்கினார்கள். ஒரளவு தெரிந்த ஒரு ஹீரோயினை கமிட் செய்தோம். ஆனால், அவரும் படப்பிடிப்பு தொடங்குகிற நேரத்தில் திடீரென எஸ்கேப்பாகி விட, ஹீரோயின் இல்லாமல் தவித்தோம். அப்போது டான்ஸ் மாஸ்டர் தினேசிடம் நிலைமை சொன்னபோது, அவர்தான் மெகாலியை அனுப்பி வைத்தார். அவரை பார்த்தவுடன் இந்த படத்தின் டீச்சர் கேரக்டருக்கு அவர் செட்டாவார் என தோன்றியது. மறுநாளே அவரை வைத்து படப்பிடிப்பு தொடங்கினோம். பாடல்காட்சி எடுத்தோம்' என்றார்.
ஹீரோயின் மெகாலி பேசுகையில் ''படக்குழு நிலைமை புரிந்து நடிக்க ஓகே சொன்னேன். டீச்சர் கேரக்டர், படத்தில் இடம் பெற்ற சமூக அக்கறை விஷயங்கள் எனக்கு பிடித்து இருந்தது'' என்றார்.