2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

சினிமா பார்ப்பது மேற்கத்திய கலாசாரம் என்றும் தமிழ் பாரம்பரிய நாடகங்களை சினிமா அழித்து விடும் என்றும் சினிமாவுக்கு எதிரான ஒரு பிரசாரம் இருந்து கொண்டே இருந்தது. இந்த கருத்துக்களின் மாற்றும் வகையில் தனிப்பாடல் ஒன்று 'ராஜா ராணி' படத்திற்காக உருவாக்கப்பட்டது.
1956ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை ஏ பீம்சிங் இயக்கினார். சிவாஜி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், பத்மினி, ராஜ சுலோச்சனா, என்.எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் உள்ளிட்ட பலர் நடித்தனர்.
இந்தப் படத்திற்கு மு. கருணாநிதி வசனம் எழுதினார். அவர் எழுதிய 'சேரன் செங்குட்டுவன்' 'சாக்ரடீஸ்' போன்ற நாடகங்களும் இந்த படத்தில் இடம்பெற்றது.
படத்தின் இந்த சிறப்பு அம்சங்களை சொல்லி படம் பார்க்க வருமாறு அழைத்து ஒரு பாடல் உருவானது அந்த பாடல் படத்தின் துவக்கத்திலேயே இடம் பெற்றது.
"வாங்க வாங்க இன்று இரவு நல்லிரவு" என்று தொடங்கும் இந்த பாடலை எம்.எல். வசந்தகுமாரி பாடினார். பாடலை கருணாநிதி எழுதியிருந்தார். பாடலுக்கு பத்மினி ஆடி இருந்தார் கீழ்பாக்கத்தில் உள்ள நியூடோன் ஸ்டுடியோவில் தியேட்டர் செட் அமைக்கப்பட்டு பாடல் படமாக்கப்பட்டது.