தணிக்கை நடைமுறையில் உள்ள சிக்கல் : 'பராசக்தி' வெளியீடும் தள்ளிப் போகலாம் | பெண் இயக்குனர் இயக்கிய படமா? ராம்கோபால் வர்மா ஆச்சரியம் | ஜனநாயகன் ரிலீஸ் சிக்கல் : விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த திரைப்பிரபலங்கள் | தெலுங்கில் மாஸ் காட்டிய 'அகண்டா-2' முதல்... பீல் குட் மூவி 'அங்கம்மாள்' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | 'ஜனநாயகன்' தள்ளிப்போனதால் நிகிலா விமல் படத்துக்கு அடித்த ஜாக்பாட் | 'பராசக்தி' படத்தில் பசில் ஜோசப் ; உறுதி செய்த சிவகார்த்திகேயன் | சிறப்பு பாடல்களுக்கு இனிமேல் நடனமாட மாட்டேன்!- ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | 'பராசக்தி'யில் யுவன் சங்கர் ராஜா பாடிய 'சேனைக் கூட்டம்' பாடல் வெளியானது! | கார்த்தியின் 'வா வாத்தியார்' பொங்கலுக்கு திரைக்கு வருகிறதா? | 'தக் லைப்' விவகாரம் : அப்போது குரல் கொடுக்காத விஜய்.. |

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 29வது படம் 'தெனாலி ராமன்'. 1956ம் ஆண்டு வெளிவந்த படமாகும். பி.எஸ்.ரங்கா இயக்கத்தில் வெளிவந்தது. 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த விகடகவி தெனாலி ராமனின் கதையை, அதே பெயரில் திரைப்படமாக்கினார்கள்.
தெனாலி ராமனாக சிவாஜி கணேசன், கிருஷ்ணதேவராயராக என். டி. ராமராவ், அப்பாஜியாக சித்தூர் வி. நாகையா, ராஜகுருவாக நம்பியார், ராமனின் மகனாக மாஸ்டர் வெங்கடேசுவர், கிருஷ்ணஸ்ரீயாக பானுமதி ராமகிருஷ்ணா, கமலாவாக ஜமுனா, ராதாவாக சுரபி பாலசரசுவதி திருமலாதேவியாக நடித்திருந்தார்கள்.
தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. தமிழ் பதிப்பிற்கான திரைக்கதையை கண்ணதாசன் எழுதினார். தெலுங்கு பதிப்பிற்கு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு தமிழில் வெளியானது. இந்த படத்தின் வெளியீட்டின்போது ஒரு சுவையான சம்பவம் நிகழ்ந்தது. கண்ணதாசனும், சிவாஜியும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். இந்த படத்த்தின் போது சிவாஜி காமராஜரின் தலைமையை ஏற்று காங்கிரசில் சேர்ந்தார்.
இதை விமர்சிக்கும் விதமாக கண்ணதாசன் தனது பத்திரிகையில் படத்தில் வரும் காட்சிகளில் ஒன்றான சிவாஜியை கழுத்து வரை புதைத்து யானை ஒன்று தன் காலால் அவர் தலையை நசுக்க முயல்கிற காட்சியை விளம்பரமாக வெளியிட்ட கண்ணதாசன் 'கணேசனின் எதிர்காலம்' என்று தலைப்பு கொடுத்திருந்தார்.
அதாவது காமராஜர் என்கிற பெரிய அரசியல் சக்தி சிவாஜி என்கிற கலைஞனை நசுக்கப்போகிறது என்பதாக இதன் பொருள். இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இதன் காரணமாக சிறிது காலம் கருத்து வேறுபாட்டுடன் இருந்த கண்ணதாசனும், சிவாஜியும் பின்னர் மீண்டும் இணைந்தனர்.