பேரன், பேத்திக்கு ஆன்மிக பெயர் சூட்டி மகிழ்ந்த சிரஞ்சீவி | 'பொன்னியின் செல்வன்' பாடல் வழக்கு: ஏ.ஆர்.ரஹ்மான் 2 கோடி செலுத்த கோர்ட் உத்தரவு | செக் மோசடி வழக்கில் தயாரிப்பாளர் சதீஷ்குமார் விடுதலை | 'நான் ருத்ரன்' படத்தில் நடிக்க மறுப்பு : 20 கோடி நஷ்டஈடு கேட்டு தனுசுக்கு நோட்டீஸ் | ஜெயிலர் 2 படத்தை ஜூன் மாதத்திலேயே வெளியிட திட்டம் | அமீர்கான் மகனுக்கு ஜோடியான தமன்னா | ரூ. 40க்கு தனது சாப்பாடு தரும் அர்ஜித் சிங் | தயாரிப்பு நிறுவனம் துவங்கும் ரியோ ராஜ் | பிரீயட், பேண்டஸி படமாக 'தனுஷ் 56' : மாரி செல்வராஜ் தகவல் | எஜமான் பட காட்சியை போன்றே விஜய்க்கு வைத்தேன் : பரதன் |

சினிமா பிரபலங்களின் தனிப்பட்ட நிகழ்வுகளை ஒளிபரப்பும் உரிமை பெற்று அதை ஓடிடி தளங்களில் வெளியிடுவது இதற்கு முன்பு நடந்துள்ளது. நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமண வைபவத்தை ஓடிடி நிறுவனம் ஒன்று பெற்று ஒளிபரப்பியது.
இந்தியத் திரையுலகத்தின் அடுத்த பிரபல திருமண வைபவம் என விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரது திருமணம் பேசப்படுகிறது. இந்த மாதம் பிப்ரவரி 26ம் தேதி ராஜஸ்தானில் உள்ள உதய்ப்பூரில் அரண்மனை ஹோட்டல் ஒன்றில் அவர்களது திருமணம் நடைபெற உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆனால், இதுவரையில் எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதனிடையே, அவர்களது திருமண வைபவத்தை ஓடிடி நிறுவனம் ஒன்று அதிக விலைக்குக் கேட்டதாகவும் அதை விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஜோடி மறுத்ததாகவும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அது தங்களது தனிப்பட்ட நிகழ்வு, அதனால் அதை விற்க விரும்பவில்லை என அவர்கள் சொன்னதாகவும் சொல்லி வருகிறார்கள். இது குறித்தும் எந்த விதமான அதிகாரப்பூர்வத் தகவலும் இல்லை.
தங்களது திருமணம் குறித்து விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தால்தான் பரவி வரும் சில வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என தெலுங்கு திரையுலகத்திலும், பத்திரிகையாளர்களும் கூறி வருகிறார்கள்.