கோவையில் ராம் சரணுக்கு ஆபரேஷன் நிறைவு | தனுஷ் 56வது பட அப்டேட் தந்த தமிழரசன் பச்சமுத்து! | இவர் படம்னா இது இல்லாமலா? : தமிழ் சினிமாவிற்கு தனி அடையாளம் தந்த டைரக்டர்கள் | ரவிதேஜா, பிரியா பவானி சங்கர் நடித்த 'இருமுடி கட்டு' ஆக.,21ல் ரிலீஸ் | சுவாஸ்யமான சூப்பர் தகவல்கள்: தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷல் | ஜனநாயகன் படத்திற்கு எதிராக வழக்கு : பதிலளிக்கும்படி தணிக்கை வாரியத்திற்கு உத்தரவு | சினிமா மாறிவிட்டது இப்ப கட்டிங் இல்லை : சங்க நிர்வாகிகள் புகழாரம் | மும்பை பாந்த்ராவில் பூஜா ஹெக்டே கட்டிய பிரமாண்ட வீடு! | ஜூனியர் என்.டி.ஆருக்கு தோள்பட்டையில் காயம்! 'டிராகன்' படப்பிடிப்பு நிறுத்தம்! | கே.ஜி.எப் நாயகனுடன் இணைந்து நடிக்க ஆர்வத்தில் இருக்கும் ரன்பீர் கபூர்! |

பார்த்திபன், இயக்கி, நடித்த முதல் படம் 'புதிய பாதை'. புதிய பாதை கதையை எழுதிவிட்டு தயாரிப்பாளர் தேடி அலைந்தபோது சுந்தரம் என்ற பத்திரிகையாளர்தான் படத்தை தயாரிக்க முன்வந்தார். 40 லட்சத்துக்கு பட்ஜெட் போடப்பட்டு 38 லட்சத்தில் எடுக்கப்பட்ட படம்.
இந்த படத்தில் நாயகனாக நடிக்க ரஜினியைத்தான் நினைத்திருந்தார் பார்த்திபன். ஆனால் அப்போது ரஜினியின் சம்பளமே 50 லட்சத்திற்கு மேல் என்பதால் அந்த திட்டத்தை கைவிட்டு தானே நடித்தார். குஷ்புதான் நாயகியாக நடிக்க வேண்டும் என்று விரும்பினார். அவரது வீட்டுக்கு சென்று கதை சொன்னார். கதை குஷ்புவிற்கு மிகவும் பிடித்து நடிக்கவும் ஒப்புக் கொண்டார். பிறகு படத்தின் சில டயலாக்குகளை கொடுத்து பேசச் சொன்னார். ஆனால் அவரது வசன உச்சரிப்பில் இந்தி வாசனை இருந்தது. அதோடு அவரது தோற்றமும் வடஇந்திய பெண்ணாக இருந்ததால் அவரை நிராகரித்தார்.
பிறகுதான் சீதாவை தேர்வு செய்தார். சீதாவை கண்டதுமே காதல் கொண்டார். இதனால் படத்தில் தனது கேரக்டர் பெயரையே சீத்தாராமன் என்று மாற்றினார். பின்னர் காதலித்து திருமணமும் செய்தார்.




