டிஸ்கோ சாந்திக்கு என்னாச்சு? | ‛முருகா' அசோக் உடன் ஒரே படத்தில் அறிமுகமாகும் 3 ஹீரோயின்கள் | புதுமுகங்களின் மிடில் கிளாஸ் மாப்பிள்ளை | 'பீப்' டைட்டிலுக்கு என்ன அர்த்தம் | மீண்டும் இணையும் சசிகுமார், சமுத்திரகனி | பிளாஷ்பேக்: டிராப் ஆன எம்ஜிஆர் படத்தை மீண்டும் எடுத்த ஜேப்பியார் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆரை பேயாக சித்தரித்ததால் தோல்வி அடைந்த படம் | சோஹா அலிகானிடமிருந்து எனக்கு எந்த அழுத்தமும் வரவில்லை - குணால் கெமு | நடிகர் ஆனந்த் ராமை கரம்பிடித்தார் நடிகை பிரிகிடா | பாகுபாடு பார்க்காமல் இசையமைக்கும் இளையராஜா |

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பள்ளபட்லா என்ற ஊரில் 1938ம் ஆண்டு பிறந்து, 3 வயதில் இசை கற்க ஆரம்பித்து, மேடை நிகழ்ச்சி முதல் திரைப்பட பாடகியாக உருவெடுத்தவர் எஸ்.ஜானகி. 17 மொழிகளில் எண்ணற்ற பாடல்களை பாடி சாதித்துள்ள ஜானகி, நேற்று வயது மூப்பின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 88.
ஜானகியின் மறைவுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், இந்திய திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர். மைசூரு மகாராஜா திடலில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல், மைசூரில் உள்ள எச்.டி. கோட்டை சாலையில் அமைந்துள்ள கனியனஹுண்டியில் உள்ள நவீன் பண்ணை தோட்டத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அங்கு ஜானகியின் உடலுக்கு உறவினர்கள் இறுதிச்சடங்குகள் செய்தனர். கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் உத்தரவின்பேரில், 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், ஜானகியின் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த இறுதி நிகழ்வில் கர்நாடக அமைச்சர், கர்நாடக நடிகை பாரதி, பாடகர்கள் மனோ, சுஜாதா மோகன், விஜய் பிரகாஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ரசிகர்கள், பொதுமக்கள், கண்ணீருடன் ஜானகியின் இறுதிச்சடங்கில் பங்கேற்றனர்.




